தென்காசி மாவட்டத்தில் உள்ள சின்ன கோவிலாங்குளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து மினி லாரியை ஓட்டி வந்த அஜித், அவருடன் இருந்த ராமராஜ், பாண்டியன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.