சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தா போட்டியில் தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மின் மற்றும் மின்னணுவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் சுடலை ராஜாமணி மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டார். அவர் கட்டா பிரிவில் இரண்டாவது இடத்தையும், குமிட்டி பிரிவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். இந்நிலையில் சாதனை படைத்த சுடலை ராஜமணியை முதல்வர் வைஸ்லின் ஜிஜி, பேராசிரியர்கள் உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.