திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அவிநாசி பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன், ஜெபராஜ், யுவராஜ், கனகராஜ் ஆகியோர் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகேந்திரன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.