சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான காயத்ரியை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த காயத்ரியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது, காயத்ரி மீது பல மோசடி வழக்குகள் வந்துள்ளது. காயத்ரி, அவருக்கு உடனடியாக இருந்த ராஜசேகர், அசோக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளோம். விசாரணை முடிவில் தான் அவள் எவ்வளவு பணம் மோசடி செய்தார் என்பது தெரியவரும்.