சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியில் கல் உடைக்கும் தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரமேஷ்(10), தீபக் குமார்(6) என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு மகன்களையும் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் வீசி தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவையும், ரமேஷையும் பத்திரமாக மீட்டனர். ஆனால் தீபக் குமார் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபக் குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.