கரூர் மாவட்டத்திலுள்ள மறவா பாளையம் பகுதியில் சாமியப்பன் என்பவர் அஜித் வருகிறார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று காந்திமதி நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது பாரி என்பவர் ஓட்டி வந்த கார் காந்திமதி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த காந்திமதி, பாரி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.