ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளி திருப்பூர் ஆலமரத் தோட்டம் பகுதியில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மாலை மணி வேலை முடிந்து மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி மணி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.