கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 17 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இதேபோல குடிசநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி மாணவி ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் நின்று கொண்டிருந்த போது சுமன் வாகனம் நிறுத்துமிடத்தில் வைத்து மாணவியின் கையை பிடித்து இழுத்து காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சுமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.