கரூர் மாவட்டத்தில் உள்ள மேல்நங்கவரம் அண்ணாநகர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16-ஆம் தேதி இளங்கோவன் தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனார் ஆகியோருடன் வீட்டிற்கு வேலி அமைத்து கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அறிவழகன், கரிகாலன், செல்லாயி ஆகிய 3 பேரும் இணைந்து இது எங்களுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தில் வேலி அமைக்க கூடாது என கூறி இளங்கோவன், அய்யனார், அனிதா ஆகிய 3 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் காயமடைந்த இளங்கோவன் உட்பட 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கரிகாலன், அறிவழகன், செல்லாயி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.