திருச்சி மாவட்டத்தில் உள்ள பலூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முத்துசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை முத்துசாமி மிதித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு காயமடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முத்துசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.