திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வியாபாரியான ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.