திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனக்கு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிவிடலாம் எனவும் சந்திரசேகர் ஜோதிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி ஜோதி கடந்த 2019-ஆம் ஆண்டு சந்திரசேகரிடம் 6 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஆனால் கூறியபடி சந்திரசேகர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் ஜோதி பணத்தை திரும்ப கேட்டதற்கு சந்திரசேகர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜோதி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சந்திர சேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.