கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை கிறிஸ்துபுரம் பகுதியில் ரெனால்டு ரீகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வில்லுக்குறி குதிரைபந்துவிளை பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ரெனால்ட் இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாழவிளை பகுதியில் இருக்கும் ரேஷன் கடை அருகே 500 ரூபாய் நோட்டு சாலையில் கிடப்பதை பார்த்த ரெனால்டு அதனை எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றார்.

மறுநாள் காலை ரெனால்ட் கொற்றிகோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார். இதனையடுத்து பணத்தை தவறவிட்டவர்கள் உரிய அடையாளத்தை சரியாக கூறினால் பணம் ஒப்படைக்கப்படும். யாரும் உரிமை கோராவிட்டால் 2 நாட்களுக்கு பிறகு பணம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் நேர்மையாக பணத்தை ஒப்படைத்த ரெனால்டை போலீசார் பாராட்டியுள்ளனர்.