அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடகடல் கழனி தெருவில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரவி(53), ராஜேந்திரன்(49) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இட பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பிக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.