நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலை பஜாரில் இருக்கும் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போது அந்த கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது.

இதனால் கடை உரிமையாளரான ஜாகிர் உசேன், கடையில் வேலை பார்த்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கடையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 600 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.