நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் இருக்கும் சுற்றுலா தலங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஐரிஷ் பார் சிவர் (50) என்பவர் சுற்றி பார்த்துவிட்டு டானிங்டன் செல்லும் சாலையில் இருக்கும் கடையில் தேநீர் அருந்திவிட்டு காமராஜர் சதுக்கம் வழியாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஐரிஸ் தனது பணப்பையை தவறவிட்டார். அதில் 4,500 ரூபாய் பணம், சர்வதேச ஓட்டுனர் உரிமம், வங்கி கிரெடிட் கார்டு ஆகியவை இருந்தது.

இதுகுறித்து ஐரிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அவர் காமராஜர் சதுக்கம் அருகே பணப்பையை தவறவிட்டது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று பணப்பையை மீட்டு சுற்றுலா பயணியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணி போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.