கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊமங்கலம் மெயின் ரோட்டில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்.ஐ.சி முகவராக இருக்கிறார். இவரது மனைவி வரலட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிடுவதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜவேலு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை கடப்பாறையால் உடைத்து 23 1/2 பவுன் தங்க நகை, 150 கிராம் வெள்ளி, 1 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜவேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.