கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மிதுன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சந்துரு, குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் பத்ரகாளியம்மன் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் யானைகள் முகாம் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மான் சாலையின் குறுக்கே சென்றதால் சந்துரு சடன் பிரேக் பிடித்துள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மிதுன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.