நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், புரட்சியாளர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நூற்றாண்டு விழாவை பெருமையாக கொண்டாட வருகை தந்திருக்கின்ற பெரியோர்கள், தாய்மார்கள்,  உறவினர்கள் , ஊடக நண்பர்கள் உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் அன்புமணி ராமதாஸின் பணிவான வணக்கங்கள்.

இந்த இனிய விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. புரட்சியாளர் இமானுவேல் சேகரன் அவர்களுடைய  நூற்றாண்டு விழா கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இந்த விழாவிலே பாட்டாளி மக்கள் கட்சியினுடைய மூன்று முக்கிய பொறுப்பாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர்,

பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுச் செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொருளாளர் மூவரும் இந்த இனிய விழாவில் கலந்து கொண்டிருக்கின்றோம். காரணம் முக்கியமான விழா. இந்த விழா என்னைப் பொறுத்தவரை தமிழக அரசு நடத்தி இருக்க வேண்டும்.  ஆனால் நிச்சயமாக இனிவரும் காலத்தில்…  நமக்கும் ஒரு நேரம் வரும்.

ஒரு காலம் வரும். புரட்சியாளர் இமானுவேல் சேகரனார்  பற்றி…  நிச்சயமாக நாம் எல்லாம் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு,  மிகப்பெரிய அளவிலே நாம் கொண்டாடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது என நம்பிக்கை தெரிவித்தார்.