மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1258 பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 21 ஆயிரத்து 678 பணியிடங்களுக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகள் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இறுதி செய்யப்பட உள்ளது. அரசு பல வருடங்களுக்கு பிறகு கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்களில் ஆசிரியர் ஆட் சேர்ப்புகளை அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் திறன் மற்றும் முன்னறி தேர்வுக்கு 2,39,730 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தாலும் அதில் 2,16,433 பேர் தகுதியானவர்கள். இந்தத் தேர்வர்களும் 2022 ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.