மத்திய அரசு நடத்தும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திற்கான லோகோ வடிவமைப்பது தான் இந்த போட்டியாகும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இதில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் லோகோவை அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் தகவல்களை அறிய mygov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.