நாடு முழுவதும் மத்திய அரசு கலந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் காத்து கிடந்தனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2000 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுக்களை வெளியிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக புதிய 2000, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தற்போது புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று  முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக வங்கிகளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் என்னை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. அது தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.