நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி முதல் இ-பைக்குகளுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 2019 முதல் இரண்டு ஆண்டுகளாக மானியம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி தற்போது இ-பைக்குகளின் மின்கலன் திறனை பொறுத்து 15 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாயிரம் ரூபாயாக குறைக்கப்பட உள்ளது. இது நடைமுறை வருகின்ற ஜூன் 1ம் தேதி முதல் அம்மனுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.