சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.