சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல பேர் முதலீடு செய்த 4 கோடியே 81 லட்ச ரூபாய் பணத்தை தனியார் நிறுவனத்தினர் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சென்னை கொளத்தூரை சேர்ந்த சுந்தர்ராஜன், அவரது மகன் மகேஷ் குமார் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுபோன்ற மோசடி வேலைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.