சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் வடக்கு காடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சிவா ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர 5,500 ரூபாய் வாடகைக்கு வெங்கடேசனின் காரை எடுத்து சென்றுள்ளனர். அவர்கள் 4000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டனர். மீதி பணத்தை கேட்பதற்காக வெங்கடேசன் சென்றுள்ளார்.

அப்போது மணிகண்டனும், சிவாவும் வெங்கடேசனை தகாத வார்த்தைகளால் திட்டி அரிவாளால் வெட்டி, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணன், தம்பிகளான மணிகண்டன், சிவா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.