சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய மேட்டூர் அமராவதி நகரில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 7 வயதுடைய மகனும் இருக்கின்றனர். இதில் மதியழகன் தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதியழகன் ஏல சீட்டு போட்டு நஷ்டம் அடைந்ததாக தெரிகிறது.

மேலும் கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த மதியழகன் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.