பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங் பேரா மெடிக்கல் கல்லூரி நடத்தி வருகிறார்.

இங்கு 80க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு படித்து வரும் ஒரு மாணவியை அடிக்கடி வினோத்குமார் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து வினோத்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் வினோத்குமாரின் பாராமெடிக்கல் கல்லூரியை ஆய்வு செய்து சீல் வைத்தனர்.