திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் தனது உடைமைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்த 273 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு 17 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.