தோட்டத்தில் வேலை பார்த்த ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தங்கள் தோட்டத்தில் வேலை செய்ய வந்த ஆதி திராவிட வகுப்பை சேர்ந்த 4 பெண்களுக்கு அவ்வீட்டு பெண்கள் கொட்டாங்குச்சியில் தேநீர் கொடுத்த விவகாரம் சமீபத்தில் பரபரப்பானது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் அவ்வீட்டு மாமியார் மருமகள் ஆகிய 2 பெண்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.