சென்னை கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக ஆம்னி பேருந்துகளை இயக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படுகின்றன. மேலும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள புக்கிங் அலுவலகங்களில் இருந்து பயணிகள் பேருந்துகளில் ஏறிக்கொள்ளலாம் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடாபான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் தற்காலிகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.