தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்த சிவலிங்கம் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரித்த போது  சிவலிங்கம் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் அவருக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும் பலரிடம் கூறியுள்ளார்.

இதனால் தனக்கு இருக்கும் வங்கி கடனை செலுத்த முடியவில்லை என்றும் கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் தான் மன விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனிடையே அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்ட சிவலிங்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.