திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் ஹரிணி வீட்டில் இருந்தபோது பூ பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி  ஹரிணி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் ஹரிணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.