கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பள்ளி சேடார் தெருவில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது.

சம்பவம் நடைபெற்ற அன்று லோகநாதன் செல்போன் மூலம் பத்மநாபனை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் வைத்துள்ளார். இது குறித்து பத்மநாபன்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் லோகநாதன் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.