ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் என்பது தெரியவந்தது.

இவர்கள் ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகானந்தம், குமரன், பிரபு, எம்.ஜி நாத் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.