விழுப்புரம் மாவட்டம் நெய் குப்பி கிராமத்தில் ஏழுமலை (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் ரம்யா என்பவருடன்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகும் நிலையில் ஏழுமலைக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஏழுமலையை அவருடைய மனைவி தட்டி கேட்டுள்ளார். இதனால் கோபத்தில் தன் மனைவியை அடிக்கடி ஏழுமலை அடித்து துன்புறுத்தியுள்ளார். அவருடைய தாய் வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவற்றை கூடுதலாக வாங்கி வரும்படியும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளில் ரம்யா அவருடைய தாயருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் தினசரி தன்னை அடித்து துன்புறுத்துவதோடு வரதட்சனை கொடுமை செய்வதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ரம்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ரம்யாவின் தாய் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி வெள்ளி மேடு பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 6 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.