நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தை சேர்ந்த பெண்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  இதுவரை அது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் ராசிபுரம் தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென தரையில் அமர்ந்து வீட்டுமனை  பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.