ராஞ்சியிலிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இரண்டு மருத்துவர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பிறவியிலேயே இதய கோளாறு இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து டாக்டர் நிதின் குல்கர்னி மற்றும் மொசாமில் பெரோஸ் ஆகியோர் கிடைத்த கருவிகளைக் கொண்டு குழந்தைக்கு செயற்கை சுவாசத்தை அளித்தனர். விமானம் தரையிறங்கியவுடன் குழந்தையை அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சற்று நேரம் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.