தெலுங்கு நடிகரான பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு உலக அளவில் பிரபலம் அடைந்தார். அதன் காரணமாக இப்போது அவருக்கு தமிழ் உட்பட அனைத்து மொழியிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் வேற வாழ்க்கை பற்றி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிரபாஸ் அரண்மனை போன்ற வீடு, நீச்சல் குளம், தோட்டம் என செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறாராம்.

அதில் அவர்களுடைய வீட்டின் மதிப்பு மட்டுமே 60 கோடி தானாம். அது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி செய்யும் உபகரணங்களுக்காகவே இவர் இரண்டு கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளார். மேலும் 84 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது என்றும் அவர் அந்த பண்ணை வீட்டில் தான் அதிக நேரம் செலவழிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.