காமெடி புகழில் உச்சியில் இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தானம் பெரும் கடன் சுமைக்கே ஆளாகியுள்ளார். அதனாலயே அவர் தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

ஒரு படத்தில் நடிப்பதற்காக 5 கோடி வரை சம்பளம் கேட்பதாகவும் அது மட்டுமல்லாமல் 50 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் ஆக கொடுக்க வேண்டும் என தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களுக்கு கண்டிஷன் போடுவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சந்தானம் தன்னுடைய கடனுக்காக தயாரிப்பாளர்களிடம் போட்டுள்ள இந்த கிடுக்குபிடி சர்ச்சையை கிளப்பி உள்ளது.