ஹரிஷ்வர்தன் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் உருவாக்கத்தில் உருவாகியுள்ள இன் கார் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வருகின்ற மார்ச் மூன்றாம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரித்திகா சிங் “இன் கார்” படம் பெரிதும் பாதித்ததாக கலக்கத்துடன் பேசினார். பிஞ்சு குழந்தையை கூட விட்டு வைப்பதில்லை. அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது எப்படி இது போன்ற கேவலமான வேலைகளை செய்ய வைக்கிறது என்று பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு ரித்திகா சிங் கொஞ்சம் கால தாமதமாகியதால் அவருக்காக காத்திருந்த செய்தியாளர்களிடமும் ரசிகர்களிடமும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார்.