இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்குகள் அனைத்தும் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை முன்னிட்டு பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வகையில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கும் அன்றைய தினம் பொது விடுமுறை வழங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.