இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து வேலைகளும் சுலபமாகிவிட்டது. தற்போது மொபைல் எண்ணை வைத்து யூபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். ஆனால் NPCI புதிய விதிகளின்படி வங்கி கணக்கு எண் இல்லாமல் பணம் பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கியின் பெயரை பயன்படுத்தி ஐந்து லட்சம் ரூபாய் வரை அனுப்ப முடியும். இதற்காக வங்கி செயலியில் பயனாளியை சேர்க்க தேவையில்லை. உடனடி பணப்பரிவர்த்தனை காண இந்த புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.