தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வங்கி கணக்கு விவரங்களை யாராவது கேட்டால் தெரிவிக்க வேண்டாம் என்று அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடிகள் நடைபெற்று வருவதால் வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி செய்ய வாய்ப்புள்ளதால் யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வங்கி விவரத்தை கேட்டு மோசடி நடந்து வருவதாக புகார் இருந்துள்ள நிலையில் எக்காரணத்தை கொண்டும் அரசு வங்கி கணக்கு விவரங்களை கேட்காது எனவும் இதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.