தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் சமீப காலமாக பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வளர்ந்து வரும் நவீன காலகட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்களும் ஆன்லைன் மூலமாக செய்யப்படும் நடைமுறைகள் வந்துவிட்டது.

இந்த நிலையில் பத்திரப்பதிவு செயலாளர் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது அக்டோபர் மாதம் முதல் அனைத்து சொத்து ஆவணங்களும் பதிவுக்கு வரும்போது அந்த சொத்தில் புகைப்படங்கள் அதாவது புவியியல் ஆயங்கள் உடன் ஆவணமாக இணைக்கப்பட வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையில் நடைபெறும் குளறுபடிகளை தடுப்பதற்காக இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.