பொதுத்துறை வங்கி நிறுவனமான பேங்க் ஆப் மகாராஷ்டிரா கடன் வாங்கிய பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனுக்கான செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இது தவிர வட்டி விகிதமும் குறைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.20% குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன்கள் 8.60 சதவீதத்திற்கு பதில் 8.50 சதவீதத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது