கேரளாவில் காய்ச்சல் பாதித்து ரத்த பரிசோதனை செய்ய வந்த ஏழு வயது சிறுமிக்கு நாய் கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அங்கமாலி அருகே அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருந்தை மாற்றி ஊசி செலுத்திய தற்காலிக செவிலியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை கூட பார்க்காமல் ஊசி செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க தான் அதிகாரிகளிடம் முறையிடவில்லை என்று சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்