கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 11-வது வட்டம் தாங்கி சாலையில் சத்திய பால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி ஒன்றாவது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சத்திய பால் வடலூர்- ராகவேந்திரா சிட்டி பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டுமான பணிகளை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் வடலூர்-பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சத்தியபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சத்திய பாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.