அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் யாரும் பத்து ரூபாய் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகரில் இயங்கி வரும் டாஸ்மாக்களில் பத்து ரூபாய் அதிகமாக ஊழியர்கள் வசூலித்துள்ளார்கள். இதனால் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர் அங்கிருந்து செங்கல்பட்டு நகர உதவி காவல் ஆய்வாளர் ராஜா என்பவரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவரோ டாஸ்மாக் ஊழியரை எதுவும் கேட்காமல் புகார் கூறிய நபரை சராமாரியாக அடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளவில் தீயாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜாவை  செங்கல்பட்டு எஸ்பி  அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.