தமிழகத்தில் கலைஞரின் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற முகாம் அறிவிக்கப்பட்ட சர்வே எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரிகளுக்கு பயிற்சிகள் முடித்து நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தனித்தனியாக முகாம்கள் நடத்தப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து தகுதியானவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பதிவு செய்ய வருபவர்கள் வங்கி புத்தகம், ஆதார் எண் மற்றும் மின் இணைப்பு எண் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். ஆதார் எண் இருப்பவர் மட்டுமே பதிவு செய்ய முடியும். வங்கி கணக்குடன் ஆதார் எண் கண்டிப்பாக இணைத்து இருக்க வேண்டும். மேலும் முகாமில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.